என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காமராஜர் விருது"
- தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
- பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
பழனி:
ஆண்டுேதாறும் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு பழனி அருகே உள்ள ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் விருதுக்கு தேர்வாகி உள்ளன. தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது,
கல்வி செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல், கற்பித்தல் திறன், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
- 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர்.
- திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார்.
உடுமலை :
உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ். சஹானா பர்வின், கோ. சி. யாழினி ஆகியோர் 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர். விருது பெற்ற மாணவிகளுக்கு காமராசர் விருதுக்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார். 12 ம் வகுப்பு மாணவி எஸ். சஹானா பர்வின் வங்கிக்கணக்கில் ரொக்கப்பரிசு ரூ. 20ஆயிரமும், 10 ம் வகுப்பு மாணவி கோ. சி. யாழினி வங்கிக் கணக்கில் ரொக்கப்பரிசு ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற மாணவிகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ப. விஜயா, உதவித்தலைமை ஆசிரியர்கள் ஏ. ஜெயராஜ், மஞ்சுளா, தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்